×

அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் 17ல் ஆஜராக சம்மன்

சென்னை:  திரைத்துறையில்  பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசி நடிகை மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பான புகார் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரை  விசாரணைக்கு ஆஜராகும்படி மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பிய நிலையில் அவர் தலைமறைவானார். பின்னர் கேரளாவில் இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கிடையில் இருவர் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.  இந்த வழக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகியோரை டிசம்பர் 17ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்….

The post அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் 17ல் ஆஜராக சம்மன் appeared first on Dinakaran.

Tags : meera mithun ,Chennai ,Mira Mithun ,Ajar Samman ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...